Published On Oct 2, 2024
அண்ணல் மகாத்மா சேவா சங்கம் சார்பில் மகாத்மா காந்தி அவர்களின் 154வது பிறந்தநாள் விழா மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு செம்பியம் காந்தி சிலை அருகே கௌதமன் தலைமையில் நடைபெற்றது விழா அமைப்பாளர் சித்தார்த் முன்னிலை வகித்தார்
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட தலைவரும் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஜே, டில்லி பாபு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்
விழாவில் சக்தி நாட்டியாலயா வழங்கும் தேசப்பற்று கலை நிகழ்ச்சி நடைபெற்றது
மேலும் நிகழ்ச்சியில் மடுமா நகர் ரஞ்சன், முருகன், ராஜசேகர், துரை மதிவாணன், சண்முகதுரை, ரவிச்சந்திரன், சுந்தர்ராஜன், மகேந்திரன், மற்றும் விழா குழுவினர் மேகநாதன், மாணிக்கம், டில்லி குருநாதன், சசிகுமார்,சாந்தகுமார் ஏகாம்பரம், சுரேஷ், கார்த்தி, திலீப், கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ரகுமான், வைகோ ரவி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.