Published On Sep 18, 2024
சென்னை வியாசர்பாடி, எம்.கே. பி.நகரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை தேசவிரோதி என்று விமர்சனம் செய்த பார திய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் எச்,ராஜா அவர்களை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குறித்து எச்,ராஜா அவதூறாக பேசியதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன
அந்த வகையில் வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில் லிபாபு முன்னிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் எம்,கே,பி,நகர் பேருந்து நிறுத்தம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் எச்,ராஜாவின் அவதூறு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் கண்டன முழக்கமிட்டனர் அதனைத் தொடர்ந்து எச்,ராஜாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து செல்வபெருந்தகை கூறுகையில்
பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது அவர்களுடைய நோக்கம் அரசியல் அமைப்பு சட்டத் தை சிதைக்க வேண்டும் இந்த நாட்டை கலவர பூமியாக்க வேண்டும் இந்த நாட்டிலே அன்பை விதைக்காமல் வெறுப்பை விதைக்க வேண்டும் என நினைக்கின்றனர்
எச்,ராஜா 60 வயதை கடந்த ஒரு மனிதன் என்ன பேசுகிறார் என்பது தெரியாமல் பேசுகிறார் மகாத்மா காந்தியை கொலை செய்தவர் தேசதுரோகியா அல்லது இந்த நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம் தேசதுரோகி குடும்பமா
ராகுல் காந்தி பற்றி பேச பாரதிய ஜனதா தலைவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது
எச்,ராஜாவுக்கு தைரியம் இருந்தால் ஒரு மணி நேரம் உன்னுடைய அரசியலை நீ பேசு எங்களுடைய அரசியலை நாங்கள் பேசுகிறோம் இந்த சவாலை பகிரங்கமாக விடுக்கிறேன் என்னுடன் ஒரு மணிநேரம் அரசியல் பேச எச்,ராஜா தயாரா அதை பொதுமக்கள் அனைவரும் பார்ப்பார்கள் இதில் அவரது உண்மை முகம்தெரிந்து விடும்
இந்த தேசத்தின் தலை குனிவுதான் எச்,ராஜா, உள்ளிட்ட தலைவர்கள் இவரது பேச்சை பாஜக தலைவர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்,எச், ராஜா, உள்ளிட்ட பலரும் தொடர்ந்து ராகுல்காந்தி குறித்து அவதூறாகபேசி வருகின்றனர்
ஆனால் பிரதமர் வாய்மூடி மௌனமாக உள்ளார் அடுத்தபடியாக யார் எங்களது தலைவரை கடுமையாக பேசினாலும் அவரது வீடுகளை முற்றுகையிட தயாராக உள்ளோம்
இதற்காக எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம்
நாளை அனைத்து மாவட்டங்களிலும் எங்களது மாவட்ட தலைவர்கள் எச்,ராஜா குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.