Published On Apr 18, 2024
#alagarkovil #kallalagar #incredibleindia #gptamilvlogz #gptamilvlogs #madurai
வாழ்வில் ஒருமுறையாவது போகவேண்டிய கோவில்களில் மதுரை அழகர்கோவிலும் ஒன்று. நூபுரகங்கையில் வரக்கூடிய தீர்த்தமானது நம்முடைய நோய்களை தீர்க்கும் வல்லமையுடையது. தீர்த்தமாடிய கையோடு ஸ்ரீ ராக்காயீ அம்மனை தரிசனம் செய்வது இன்னும் சிறப்பு. முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை அமைந்திருப்பது அற்புதம். மலை அடிவாரத்தில் அமைத்திருக்கக்கூடிய ஸ்ரீ கள்ளழகரை தரிசனம் செய்யும்போது நம் மனதிற்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இங்கு ஸ்ரீ கல்யாண சுந்தரவல்லி தாயாரும், ஸ்ரீ சக்கரத்தாழ்வாரும், ஸ்ரீ யோகநரசிம்மரும் மற்றும் ஸ்ரீ ஆண்டாளும் அருள்செய்வது மிகவும் சிறப்பு.
மேலும் இங்கே காவல் தெய்வமாக ஸ்ரீ 18ஆம் படி கருப்பணசாமி வீற்றிருக்கிறார்.
இங்கே தரிசனம் செய்ய வருபவர்கள் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் வருவது சிறப்பானதாக இருக்கும். இந்த நேரங்களில் சௌகரியமாக தரிசனம் செய்வதோடு சூழலும் அருமையாக இருக்கும்.
கோவிலானது மதுரையிலிருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் அழகர் மலை என்ற இடத்தில் அமைந்துள்ளது.
• Sri Ramadevar Siddhar JeevaSamadhi | ...