Published On Sep 29, 2024
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பூர் பகுதியில் நடைபெற்றது
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டமானது சென்னை பெரம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் மாநில தலைவர் தா, வெள்ளையன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பின்பு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த நிர்வாக அமைப்பாளர் டி, பாலகிருஷ்ணன் தலைமையிலும் செயல் தலைவர் கே,தேவராஜ் மற்றும்
மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமனதாக மறைந்த தா, வெள்ளையன் மகன் டைமன்ராஜா அவர்களை தலைவராகவும் ராகவேந்திர மணி பொதுச் செயலாளராகவும், ஹரி கிருஷ்ணன் பொருளாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவித்தனர் மேலும் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பெரம்பூர் பகுதியில் வெள்ளையன் வாழ்ந்த நெல்வாயில் சாலைக்கு சுதேசி நாயகன் தா, வெள்ளையன் சாலை என பெயர் சூட்ட தமிழக அரசை வலியுறுத்தவும் தா,வெள்ளையன் அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம் முழு உருவ வெண்கல சிலையும் அமைப்பது என்றும் தா, வெள்ளையன் அவர்களின் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கொடியில் நிறுவனர் தா, வெள்ளையன் முகம் பதித்த கொடியை பயன்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது மேலும் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் என அனைத்து செயல் மற்றும் கொள்கை விளக்க தலைமை பதிவுகளிலும் கிளைசங்க பதிவுகளிலும் நிலை நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
குறிப்பாக சௌந்தரராஜன் என்கிற ராஜா வகித்து வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச்செயலாளர் பதவியை பொதுக்குழு ரத்து செய்வதாகவும் அறிவித்தனர்.